இணைந்தோம் ! உலகத் தமிழராய்
நாங்கள் இணைந்தோம் !
நனைந்தோம் ! எங்கள் தமிழ் உயிர்
உயிரென நினைத்தோம் !
(இணைந்தோம்)
தமிழின் கலைகளும் தமிழின் பண்பாடும்
தாங்கினோம் இன்பம் தாங்கினோம் !
அமிழ்தமாய் எங்கள் நெஞ்சில் ஊறும் தமிழ்
அன்பினால் உலகை வாங்கினோம் !
(இணைந்தோம்)
சிரித்த தமிழ்முகம் நிலைத்த வையகம்
செய்வோம் என ஆணை ஏந்தினோம்!
விரித்த சிறகோடும் தழைத்த புகழோடும்
விடுதலை வானில் நீந்தினோம் !
(இணைந்தோம்)
மானமே வாழ்வாய் நின்றோம் !
மலைகளை மோதி வென்றோம் !
உலகத் தமிழர் பண்
இயற்றியவர் : உணர்ச்சிக் கவிஞர் காசி.ஆனந்தன்


Comments (0)